Monday, November 30, 2009

நவம்பர் 27

முதலில் காலம் கடந்து பதிவு செய்வதற்கு வருந்துகிறேன். இன்று பல நாடுகளிலும் மிக வெற்றி கரமாக நடந்து முடிந்த ஈழ தமிழர் களுக்கான மாவீரர் நினைவு நாள் நிகழ்ச்சி களை படித்தேன். ஒவ்வரு நாடுகளிலும் சிறப்பாக நடந்து முடிந்ததில் சற்று நிம்மதி. இறுதியாக தமிழ் நாட்டில் எப்படி நடந்தேறியது என்று ஆர்வமாக தேடினேன். அதிர்ந்து போனேன்.

ஒவ்வரு நாடுகளிலும் பிரமாண்டமான அரங்குகளில் அலங்கரிக்கப்பட்டு, ஒரு இனத்தின் எழுச்சிக்காக உயிரை கொடுத்த வீரர்களுக்கான நினைவு நாள். இது சாதரன நாடு பிடி சண்டை அல்ல. மானம் காக்க / இனம் காக்க வாழ்வை பணயம் வைத்த வீரர்களுக்கு நாம் செலுத்தும் ('இறுதி' என்று குட சொல்ல மாட்டேன்) அஞ்சலி. இறந்து போன ஒருவனுக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு நடத்த இது வழிபாட்டு தளம் அல்ல, ஈழத்தை / இனத்தை அடுத்த தலை முறைக்கு கொண்டுசெலும் புனித நாள்.

இந்த நிகழ்வு எப்படி இருக்க வேண்டும் ?

ஒரு வரலாறாக / புத்தி பேதலித்து திரியும் இந்த இளைகர்களுக்கான பாடமாக இருக்க வேண்டாமா? பிரான்ஸ் / லண்டன் / நார்வே / டொராண்டோ என்று எங்கிருந்தோ வந்தவர்கள் நமக்கான விழாவை முன்னெடுத்து செல்கிறார்கள்.

இவர்களை எல்லாம் விட ஏன் இலங்கை யை விடை ஈழத்துக்கு மிக அருகில் இருக்கும் நாம் எப்படி செயல் பட வேண்டும். ஒரு அரங்கு இல்லை / எதோ எழவு வீடு மாதிரி இருந்தது. யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இந்த அளவு நாம் .................... என்று மட்டும் சொலி விடாதீர்கள். என இல்லை நம்மிடம் ???

டீலா நோ டீலா ? கோலம் / மெட்டி ஒலி களில் நமக்கான நேரத்தையும் , காதலுக்காக மயிரையும் வாழ்வதற்காக வயிரையும் , you tube துடங்கி காதலிக்கு கவிதை எழுதும் blog களில் வாழ்க்கையும் ஒலித்து வைத்து இருக்கும் என் சம கால தோழர்களே, இனம் காக்க எரிந்து போன இவர்களின் தியாகத்திற்கான புனிதத்தை அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல மறந்து விடாதிர்கள்.

குறைந்த பட்சம் உங்கள் எதிர்ப்பு உங்களிடம் இருந்தாவது தொடங்கட்டும். SO நமக்கான தேடலில் தொலைந்து போகிற நிமிஷங்களில், நமக்காக தொலைந்து போனவர்களையும் தேடுகிற நிசங்களுகாக செலவழிப்போம்.