நீங்களோ நானோ விசாரணைக்கென்று அழைத்துசெல்லப்படலாம்.
புனையப்பட்ட கதைகளில் குற்றவாளியென அறிவிக்கப்படலாம்.
பிறகெப்போதும் வீடு திரும்பாமல் போகலாம்.
வாழ்வின் முழுமையையும் சிறைக்கம்பிகளில் தொலைக்கலாம்.
ஒரு நீதி நாளில் தூக்கிலிடப்படலாம்.
மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களின் 'சதுரங்கத்தில்'
நாம் வேட்டையாடப்படாதவரை சுதந்திரம் தான்....
கொண்டாடுங்கள்.... !
( பேரறிவாளனின் நிலையை முன் வைத்து.)
-- சுகுமார்..