Tuesday, August 16, 2011

வந்தே மாதரம் !...


நீங்களோ நானோ விசாரணைக்கென்று அழைத்துசெல்லப்படலாம்.

புனையப்பட்ட கதைகளில் குற்றவாளியென அறிவிக்கப்படலாம்.

பிறகெப்போதும் வீடு திரும்பாமல் போகலாம்.

வாழ்வின் முழுமையையும் சிறைக்கம்பிகளில் தொலைக்கலாம்.

ஒரு நீதி நாளில் தூக்கிலிடப்படலாம்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களின் 'சதுரங்கத்தில்'

நாம் வேட்டையாடப்படாதவரை சுதந்திரம் தான்....

கொண்டாடுங்கள்.... !

( பேரறிவாளனின் நிலையை முன் வைத்து.)


-- சுகுமார்..