Wednesday, September 30, 2009

ஏன் இதை எழுத தொடங்கினேன்...

காலை 5 மணி, அவசரமாக குளித்துவிட்டு, 10 நிமிட நடைக்கு பிறகு bus stand i அடைந்தேன். காலை 5 மணி என்பதால் driver உம், conductor உம் சாவகாசமாக வந்தனர். அவர்கள் டீ குடிக்கும் வரை காத்திருந்தேன். 1 மணிநேர பயணத்துக்கு பிறகு ameerpet கு வந்தேன். நான் வேலை பார்க்கும் company இல் இருந்து என்னை Sharepoint கற்று கொள்ள அனுப்பி இருந்தார்கள். (நம்மல பத்தி தெரியல பாவம்) .

class முடிந்து driver i போல நானும் சாவகாசமாக office ku வந்தேன். மணி 11.30. வீட்டில் இருக்கும் ம்னைவி நாபகம் தேவை இல்லாமல் வர 9.30 கு வீட்டுக்கு போனேன். (ஆபீஸ் ல என்ன பண்ணினேன்னு கேக்ககூடாது - அது தனி அத்தியாயம் ). ரொம்ப நாள் ஆச்சு, வாங்க கொஞ்ச நேரம் வெளில காத்தாட உக்காந்து பேசலாம் - நு சொன்ன அவ கிட்ட முகத்த காட்டி விட்டு, ஓஷோ வை கையில் எடுத்தேன். எனக்கு இன்னும் ஒரு காரணமும் இருந்தது. தேதி 30. இப்படியாக என் ஒரு நாள் கழிந்தது.

சில நாட்களாக (மாதங்களாக / வருடங்களாக) என் நண்பர்களுடனான இடை................................... வெளி அதிகமானது (காரணம் ஏதும் இல்லை - சொல்ல கூடிய அளவுக்கு).
so வேலை இல்லாத வெட்டி பொழுதுகளில் எனக்கு தோன்றின ஐடியாவால் , இடை வெளியை இனும் அதிகமாகும் முயற்சி தான் இது....


இடைவெளி அதிகமாகும்................................