Friday, March 12, 2010

வாழ்வும் மரணமும்........

ஜனவரி 29, வெள்ளி கிழமை , காலை 5 மணி , வீட்டில் இருந்து போன். என் மனைவி பேசினாள். வலி அதிகமானதால் hosptial லுக்கு வந்து விட்டதாகவும் சிசேரியன் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள் என்றும் ஆபரேஷன் தியேட்டர் இல் இருந்து சொன்னாள்.

அடுத்த அரை மணிநேரத்தில் அப்பா போன் செய்தார். சிங்க குட்டி பிறந்து இருக்கு (உடனே ஆம்பள பிள்ளை னு நினைச்சுடாதீங்க , இது பொம்பள சிங்கம் ...)

விஷயம் இது அல்ல , என்னுடைய நண்பர்கள் , நெருங்கிய உறவினர்கள்
அனைவரும் வாழ்த்து சொன்னார்கள் ..

"வெள்ளி கிழமை அதும் மஹா லட்சுமி பொறந்து இருக்கா ..."

"இன்னைக்கு நிறைஞ்ச பௌர்ணமி ..."

"அதுலயும், வருசத்தோட முதல் பௌர்ணமி ..."

"இன்னைக்கு நல்ல முகூரத்த நாள் , இனைக்கு பொண்ணு பிறந்தா

கோடிஸ்வரன் ஆகலாம் .."

".. .. "

இப்படி எத்தனயோ செய்திகள் இன்று முழுதும் வந்த வண்ணம் இருந்தது ...நான் ரொம்ப சந்தோசமாக இருந்தேன்.. அதற்கு இவை எதுவுமே காரணம் இல்லை , என் சந்தோசத்திற்கு காரணம் இன்று ஜனவரி 29 .....

கோக் குடிச்சுகிட்டு, 20 20 மேட்ச் பார்த்துகிட்டு , அப்ப அப்ப துக்கம் விசாரிச்சுகிட்டு மட்டும் இருந்த நமக்கிடையில், புத்தன் பூமியில் , செத்து போன சகோதரர்களின் சோகம் தாங்காமல், தன் உடலையே துருப்பு சீட்டாக்கி கரிந்து போன , தோழன் முத்து குமாரின் முதல் நினைவு நாள் இன்று ..

சுய புலம்பல்கள் , கனவுகள் , கடமைகள் .. எல்லாவற்றையும் தூக்கி எரிந்து
அவர் எரிந்து போன தினத்தில் , தனக்கான வாழ்கையை ஏற்படுத்தி கொண்ட,
முத்து குமாரை என் வாழ் நாள் முழுதும் நினைவில் கொள்ள எனக்கு வாய்பளித்த என் மகளுக்கு சொல்ல இந்த தறுதலை அப்பனிடம் ஒன்று இருக்கிறது .. அது ,

"போராடனும் .
சக மனுசனுக்கு எதிரா நடக்குற ஒவ்வரு தீமைக்காகவும் போராடனும் .
குறைந்த பட்சம் உன் எதிர்ப்பயாவது பதிவு செய் ...