Wednesday, October 7, 2009

10000 ரூபாயும், என் மனசாட்சியும் !

எங்கள் ஆபீஸ் இல் LTA என்று ஒரு திட்டம் உண்டு.
திட்டம் இது தான், குடும்பத்தோடு பயணம் செய்யும் பொது
பயணத்தொகையில் குறிபிட்ட அளவு office திரும்ப செலுத்தி விடும்.

என் முந்தய பயண சீட்டுகளை தேடி எடுத்ததில்
வெறும் 1200 ரூபாய் கு மட்டும் தேரியது.
(15000 வரை நான் apply பணிக்கலாம்)

சரி இந்த வருடம் 1200 போதும் என்று
application ஐ fullup செய்து கொண்டு HR ரிடம் சென்றேன்.
போகும் வழியில், ஹுசைன் அந்த application வாங்கி பார்த்தார்.
பொழைக்க தெரியாத பையனா இருக்கியே (!!!)
என்று திட்டி விட்டு, venki ஐ பார்க்க சொன்னார்.

venki இடம் ஒரு travel agent இன் தொலைபேசி எண் இருப்பதாகவும்,
அவரை contact பண்ணினால், நாம் விரும்பும் தொகைக்கு
டிக்கெட் களை வாங்கி கொள்ளலாம் எனவும் சொன்னார்.

மனசு குரங்கானது.
venki யிடம் போனேன்.

தனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு தான்
travel agent ஐ தெரியும் என்று சொல்லி
கிருஷ்ண மோகன் னிடம் அனுப்பினர்.

எங்கள் அலுவலகத்தில்
கிருஷ்ண மோகன் ஐ
இதுவரை நான் பார்த்தும் இல்லை, பேசியதும் இல்லை.
ஆனால் என் கால்கள்
அவரை தேடி அலைய தொடங்கின.

ஆந்திரா வில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால்
தன் சொந்த ஊருக்கு சென்ற கிருஷ்ண மோகன்
மாட்டி கொண்டதால் விடுப்பில் இருப்பதாகவும்
வர 5 நாட்கள் ஆகும் எனவும், அவர் நண்பர்
காந்தி சொன்னார்.

நமக்கு தேவை கிருஷ்ண மோகன் இல்லை travel agent என்பதால்
அவரை தொலை பேசி வலி தொடர்பு கொண்டு, travel agent இன்
number ஐ பெற்றுவிடலாம் என்று எனக்கு புது யோசனை தோன்றியது.
அதை அமுல்படுத்தும் பொறுப்பை காந்தி இடமே ஒப்படைத்தேன்.

மறுநாள் காந்தி, என் இருக்கைக்கு வந்தார்.
கிருஷ்ணா வை தொடர்பு கொள்ள முடிய வில்லை என்று கூரி,
துளசி என்ற மற்றொரு அலுவலக நண்பரை
அறிமுகப்படுத்தினார்.

இறுதியாக துளசியிடம் இருந்து,
travel agent நம்பர் கிடைக்க பெற்றேன்.
தொலை பேசியில் அவரை தொடர்பு கொண்டேன்.

தன் பெயர் ராமா ரெட்டி எனவும்,
தானே என் அலுவலகத்திற்கு மாலை வருவதாகவும்
வேண்டிய பணத்திற்கு டிக்கெட் ஐ பெற்று கொள்ளலாம்.
அதற்கு வெறும் 2 சதவீதம் மட்டும் commison எனவும்
சொலிவிட்டு, தொடர்பை துண்டித்தார் ராமா ரெட்டி.

எதிபார்த்த படியே மாலை வந்தார்.
நான் 10000 ரூபாய்க்கு டிக்கெட் களை
வங்கி விட்டு, commision அக 200 கொடுத்தேன்.

மறுநாள் 1200 கு பதிலாக 10000 ஐ
application இல் எழுதி HR ஐ நோக்கி நடந்தேன்.

ஹுசைன் சிரித்தார்..
மனசு கனத்தது..

Tuesday, October 6, 2009

தமிழக அரசும், சினிமா விருதும்.

2007
சிறந்த படம் சிவாஜி
சிறந்த நடிகர் ரஜினி
2008
சிறந்த படம் தசாவதாரம்
சிறந்த நடிகர் கமல்
சிறந்த உரையாடல் - கலைஞர் (உளியின் ஓசை)

இதை பற்றி எழுதி நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை.
ஆனால்
இதே காலத்தில் வந்த சசி ன் பூ
சசி குமாரின் சுப்ர மனிய புரம்
ராதா மோகன் ன் அபியும் நானும்
இப்படி எத்தனையோ சின்ன(budjet இல்) படங்கள்.

இந்த படங்களும் சரி / படைப்பாளிகளும் சரி
அரசு விருதை எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்

ஆனால் உரிய அங்கிகாரம் தர மறந்த
நம் அரசின் கைய்யாலாகாத் தனத்துக்காக
வெட்கபடுவோம்.

Monday, October 5, 2009

மழை காலமும், என் நாபக மறதியும்.

நான் வாழும் hyderabad இல்,
கடந்த 20 நாட்களாக அடை மழை.

எவ்வளவு விரைவாக எழுந்தாலும்,
officeக்கு late அக செல்பவர்களில் நானும் ஒருவன்.

ஒவ்வரு நாளின் அவசரங்களில்
குடையை மறக்காமல்
மறந்து விடுவேன்.

வீடு திரும்புகையில், இந்த பாழாப்போன மழை
காட்டி கொடுத்து விடுவதால்
மனைவியிடம் மாட்டி கொல்வேன்.

சில்வியா பிலாத்தின் 'சாவதும் ஒரு கலை' போல்
நமக்கு சமாளிப்பதும் ஒரு கலை என்பதால்
குடை மறந்த மழை நாளில் என் மனைவியிடம்
தப்பித்து விடுவேன்.

ஆனால் கடந்த 3 நாட்களாக அவளின்
அர்ச்சனை தாங்க முடியவில்லை.
(அவளும் சில்வியா வை படிதிருபபால் போல).
மழையும், அவளும் விடுவதாக இல்லை.
அன்று சண்டை சாரல் சொஞ்சம் கடுமையாகவே இருந்தது.

"நாளை முதல்" என்ற Condition bail இல்
அன்று விடுதலை ஆனேன்.

மறுநாள், மழையோடு வந்தது.
அவள், குடையோடு வந்தால்.
குடை கொடுத்த திருப்தியில் அவளும்,
மழை தவறிய விரக்தியில் நானும்
அலுவலகம் சென்றோம்.

எங்கே குடை யை நான் office லேயே
விட்டு விடுவேன் என்ற பயத்தில்
அவளிடம் இருந்து வந்த 2,3
தொலை பேசி அழைப்புகளுக்கு
இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில்
குடையோடு வீட்டுக்கு கிளம்பிநேன்.

மழையில் நிற்க முடியாமல்,
தலையில் துண்டை போட்டுக்கொண்டு பூ
விருக்கும் கிழவியை பார்த்து,
யாருக்கு பரிந்து பேசுவது என்று தெரியாமல்
பேருந்திலிருந்து இறங்கிநேன்.

லேசான சாரல் என் சட்டை பையை நனைத்து.
இன்னும் சொஞ்சம் பெரிய மழைக்கு பின்
குடையை எடுக்கலாம் என்று
அமைதியாக நனைந்தேன்(நடந்தேன்)

மழை வேகம் அதிகமானது.
நடை தளர்ந்தது.
இப்பொது, என் உடல் வழியே தண்ணீர்
தரை இறங்கியது.

குடையை எடுத்த போது வீடு வந்தது.
வாசலில் கொடூர கண்களோடு என் மனைவி.

குடை யை மறப்பதற்காக தினமும்
திட்டு வாங்கும் நான். அன்று
மறக்காமல் குடையை எடுத்து சென்றதற்க்காக !.....

Thursday, October 1, 2009

போலி விமர்சனம் !..


இந்த blog ஆரம்பித்த உடனே (முதலும் / கடைசியுமாக மிக சில

நண்பர்களுள், மிக சிலருக்கு மட்டும் தெரிய படுத்தினேன் ...)

அதை விமர்சம் செய்வதாக நினைத்து கொண்டு ஒருவன் சொன்னான், "கடைசியில் நீயும் அவன மாதிரியே ஆரம்பிச்சுடீயா ? அவனுக்கு இதுல நேரிய fans இருகாங்க. நீயும் அத பாத்து கத்துக்க ... என்று. "

நான் சொன்னேன் "யாரும் யார்ட்ட இருந்தும் எதும் கத்துக்க முடியாது (கத்து
கொடுக்கவும்)"

அப்டினா "இவன் தான் பாலா வா" திரும்ப படி - இது அவன்

நான் அந்த stage i கடந்து விட்டேன் - இது நான் ( அனாரியா வும் / தீன்டாத
வசந்தமும் படிசசுட்டு என்னால திரும்பவும் இவன் தான் பாலா எப்படி
படிக்க முடியும் .. )

அவன் படித்து முடித்த ஓஷோ வை - நீ இபொழுது தான் ஆரம்பித்து இருக்க - என்று அவன் கேட்டான்.

- என்ன இது ஒரு கேவலமான comparison... அப்படி பார்த்தால் "தண்ணீர் தேசத்தை யும் / வைரமுத்துவையும் உங்கள் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது யார்னு உங்களுக்கும் எனக்கும் தெரியும்..

அதை எனை போலவே நீங்களும் மரந்திருபீர்கள் என்று நினைக்கிறேன்.....

உங்களின் அளவிடுதலும் / கற்று கொள்ளும் திறனும் எப்போதும் ஏன்
எதையாவது சார்ந்தே இருக்கிறதுன்னு எனக்கு தெரியல.

so

வாசிக்க வேண்டுமா வாசி. எழுத வேண்டுமா எழுது.. துங்க வேண்டுமா துங்கு..

புணர வேண்டுமா புனர். எப்போதும் அடுத்திருபவனை பார்க்காதே.. ஏனா

துங்கும் போது நீ தனியாக தான் துங்க முடியும்.............