Monday, October 5, 2009

மழை காலமும், என் நாபக மறதியும்.

நான் வாழும் hyderabad இல்,
கடந்த 20 நாட்களாக அடை மழை.

எவ்வளவு விரைவாக எழுந்தாலும்,
officeக்கு late அக செல்பவர்களில் நானும் ஒருவன்.

ஒவ்வரு நாளின் அவசரங்களில்
குடையை மறக்காமல்
மறந்து விடுவேன்.

வீடு திரும்புகையில், இந்த பாழாப்போன மழை
காட்டி கொடுத்து விடுவதால்
மனைவியிடம் மாட்டி கொல்வேன்.

சில்வியா பிலாத்தின் 'சாவதும் ஒரு கலை' போல்
நமக்கு சமாளிப்பதும் ஒரு கலை என்பதால்
குடை மறந்த மழை நாளில் என் மனைவியிடம்
தப்பித்து விடுவேன்.

ஆனால் கடந்த 3 நாட்களாக அவளின்
அர்ச்சனை தாங்க முடியவில்லை.
(அவளும் சில்வியா வை படிதிருபபால் போல).
மழையும், அவளும் விடுவதாக இல்லை.
அன்று சண்டை சாரல் சொஞ்சம் கடுமையாகவே இருந்தது.

"நாளை முதல்" என்ற Condition bail இல்
அன்று விடுதலை ஆனேன்.

மறுநாள், மழையோடு வந்தது.
அவள், குடையோடு வந்தால்.
குடை கொடுத்த திருப்தியில் அவளும்,
மழை தவறிய விரக்தியில் நானும்
அலுவலகம் சென்றோம்.

எங்கே குடை யை நான் office லேயே
விட்டு விடுவேன் என்ற பயத்தில்
அவளிடம் இருந்து வந்த 2,3
தொலை பேசி அழைப்புகளுக்கு
இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில்
குடையோடு வீட்டுக்கு கிளம்பிநேன்.

மழையில் நிற்க முடியாமல்,
தலையில் துண்டை போட்டுக்கொண்டு பூ
விருக்கும் கிழவியை பார்த்து,
யாருக்கு பரிந்து பேசுவது என்று தெரியாமல்
பேருந்திலிருந்து இறங்கிநேன்.

லேசான சாரல் என் சட்டை பையை நனைத்து.
இன்னும் சொஞ்சம் பெரிய மழைக்கு பின்
குடையை எடுக்கலாம் என்று
அமைதியாக நனைந்தேன்(நடந்தேன்)

மழை வேகம் அதிகமானது.
நடை தளர்ந்தது.
இப்பொது, என் உடல் வழியே தண்ணீர்
தரை இறங்கியது.

குடையை எடுத்த போது வீடு வந்தது.
வாசலில் கொடூர கண்களோடு என் மனைவி.

குடை யை மறப்பதற்காக தினமும்
திட்டு வாங்கும் நான். அன்று
மறக்காமல் குடையை எடுத்து சென்றதற்க்காக !.....

No comments:

Post a Comment