Friday, June 29, 2012

தலைப்பில்லாத கவிதை...

அந்தி மாலை
என் மடியில் அவள்.
உன் கன்னத்தில் 
ஒரே ஒரு அடி, அடிக்கவா ?
என்றேன்.

கொஞ்சம் தயக்கத்தோடு 
சரி என்றவாறு 
தலையசைத்தாள்.

செல்லமாக 
ஒரு கன்னத்தில் 
அறைந்தேன்..

அடுத்தகணம்
அவள் செய்கையால் 
அதிர்ந்தேன்.

ஒருவித நடுக்கத்தோடு 
கண்ணீரை துடைத்துக்கொண்டே 
அவளை கட்டி பிடித்துக்கொண்டேன்..

அவள்
பைபிளை படித்தறியாத
புத்தனை பற்றி தெரியாத,
அகிம்சை எனவென்றரியாத,
என் இரண்டு வயது மகள்.

//
செல்லமாக 
ஒரு கன்னத்தில் 
அறைந்தேன்..

சிரித்துக்கொண்டே 
daddy இந்த கன்னத்துல்ல அடி 
என்று இன்னொரு 
கன்னத்தைக் காட்டினாள்.

அடுத்தகணம்
அவள் செய்கையால் 
அதிர்ந்தேன்.

ஒருவித நடுக்கத்தோடு 
கண்ணீரை துடைத்துக்கொண்டே 
அவளை கட்டி பிடித்துக்கொண்டேன்..


Friday, June 22, 2012

குழந்தைகள் உலகம்!..


இன்று இரவு விஜய் T V யில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் "அக்ரகாரம் ஸ்பெஷல்" லாம். என்ன கேவலமான நிகழ்வு. ஏன் சேரி ஸ்பெஷல் / தலித் ஸ்பெஷல் னு இவனுகளால போட முடியுமா ? இன்னமும் பார்ப்பானுகளுக்கு வால் பிடிக்குற பழக்கம் நம்மை விட்டு போகலைன்னு தான் சொல்வேன்.

அவர்களோட மொழி / கலாச்சாரம் / ... தான் உயர்ந்தது னு பிஞ்சு குழந்தைகளோட பொது புத்தியில் பதிய வைக்கிற மற்றுமொரு முயற்சிதான் இது மாதிரி நிகழ்சிகள்.

இசையும் / பாடல்களும் இன்னும் ஆதிக்க சாதிகளின் கைபிடிக்குள் இருக்கும் போது, ஒரு கருப்பு தோல் காரனின் குரல் எடுபடாமலேயே போய்விடுமோனு பயமா இருக்கு.

ஏற்கனவே தொலைகாட்சி வழி, குழந்தைகளோட உணர்வுகளையும் / உலகத்தையும் நசுக்கிடோம். இதில் சாதிய உணர்வை புகுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

குழந்தைகளுக்கு வாசிக்க கத்துக்குடுப்போம் / நேசிக்க கத்துக்குடுப்போம்.