அந்தி மாலை
என் மடியில் அவள்.
உன் கன்னத்தில்
ஒரே ஒரு அடி, அடிக்கவா ?
என்றேன்.
கொஞ்சம் தயக்கத்தோடு
சரி என்றவாறு
தலையசைத்தாள்.
செல்லமாக
ஒரு கன்னத்தில்
அறைந்தேன்..
அடுத்தகணம்
அவள் செய்கையால்
அதிர்ந்தேன்.
ஒருவித நடுக்கத்தோடு
கண்ணீரை துடைத்துக்கொண்டே
அவளை கட்டி பிடித்துக்கொண்டேன்..
அவள்,
பைபிளை படித்தறியாத,
புத்தனை பற்றி தெரியாத,
அகிம்சை எனவென்றரியாத,
என் இரண்டு வயது மகள்.
//
செல்லமாக
ஒரு கன்னத்தில்
அறைந்தேன்..
சிரித்துக்கொண்டே
daddy இந்த கன்னத்துல்ல அடி
என்று இன்னொரு
கன்னத்தைக் காட்டினாள்.
அடுத்தகணம்
அவள் செய்கையால்
அதிர்ந்தேன்.
ஒருவித நடுக்கத்தோடு
கண்ணீரை துடைத்துக்கொண்டே
அவளை கட்டி பிடித்துக்கொண்டேன்..
No comments:
Post a Comment