இந்த்த பிரபாகரனை நினைத்தால் கடுப்பாக வருகிறது , என்ன ஒரு மனுஷன் அவர். பொழைக்க தெரியாத ஆளு. பெத்த தாய கூட இருந்து பாத்துக்காம, எவனோ ஒருத்தனுக்காக உயிரை குடுத்த இவரை நினைச்சாலே.........
நேற்று தோழர் பாமரன் இன் செம்மொழி மாநாட்டுக்கு வருவோர் கவனிக்க படித்தேன் .. (http://pamaran.wordpress.com/)
தமிழனுக்காக தன் வாரிசையும், சொந்த பந்தங்களையும் கொடுத்துவிட்டு,
அனாதையாக இருக்குற ஒரு தாய்க்கு, நம்மால இதை விட மரியாதையை செய்து
விட முடியாது.
செய்தி இதுதான்..
மருத்துவ சிகிச்சைக்க இங்கு வந்த பிரபாவின் 80 வயது தாய் பார்வதி அம்மாள், தவறாக விசா வழங்கி விட்டதாக திருப்பி அனுப்பி வைக்கப் பட்டார்கள்.
நமக்கு இருக்குற 1008 வேளைக்கு இடைல யாரு இதலாம் கண்டுக்குறது..
பாராட்டு விழாக்களுக்கு இடையில, தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளயும் படுச்சுட்டு அரசியல் நடத்துற நம்ம பாச தலைவன்...
கொழுந்தியா வீட்டு நாய் காணாம போனதுக்கு ஊர்வலம், போராட்டம் நடத்தும் எதிர் கட்சிகள்....
நித்தியானந்தம் , அந்த நடிகையை எந்த இடத்தில தொட்டார்னு அம்பு குறி போட்டு காட்டும் ஊடகங்கள்...
IPL உலக கோப்பை , சனிகிழமை பீர் , காதலிக்கு (களுக்கு) கவிதை - என்று நானும் நம் நண்பர்களும் ....
நமக்கு இருக்குற 1008 வேளைக்கு இடைல யாரு இதலாம் கண்டுக்குறது....
Tuesday, May 4, 2010
Subscribe to:
Posts (Atom)