Saturday, February 25, 2012

தமிழக காவல் துறையும், தொடர் கொலைகளும்..

வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக சொல்லி, 5 பேரை என்கவுண்டரில் சுட்டு கொன்றது காவல் துறை.. ஒரு சின்ன அறையில், சன்னல் வழியாக தாக்குதல் நடத்தியதாக கூறி, அனைவரையும் கண் மூடித்தனமாக சுட்டு கொன்றிருக்கிறது காவல் துறை. சரியா? தவறா? தேவையா? இல்லையா ? - இவை எல்லாம் தாண்டி, நமக்கான கேள்விகளையும் / எதிர்ப்புகளையும் பதிவு செய்வதே நம் நோக்கம்.

கடமை தவறாத தமிழக காவல் துறைக்கு...

- நூற்றுக்கும் மேற்பட்ட காவலாளிகள் இருந்தும் , ஐந்து பேரை உயிருடன் பிடிக்க முடியாதா?
- ஒருவர் மட்டும் அடையாளம் காண பட்ட நிலையில் அனைவரையும் எப்படி கொல்ல முடியும் ?
- அந்த ஐந்து பேரில் , ரெண்டு பேர் சமையல் காரணாகவோ / வேலை யாலாகவோ இருந்திருக்க வாய்ப்பு இருக்கு
- இதுவரை நடந்த எந்த என்கவுன்டரிலும் / எந்த காவலாளியும் இறந்ததாக தகவல் இல்லை.
- யாரையும் தண்டிக்க கூட உரிமை இல்லாத உங்களுக்கு / தீர்பிடும் உரிமையை யார் கொடுத்தது?

நீதி தவறாத தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ..,

- ஒவ்வரு என்கவுண்டரின் போதும், குரல் கொடுக்கிறீர்கள், ஆனால் நடவடிக்கை ??
- இதுவரை எந்த ஒரு காவல் துறை அதிகாரியாவது, தண்டிக்கப்பட்டு இருக்கிறரா?
- போலி என்று உங்கள் விசாரணையில் தெரியவந்த / அறிவிக்கப்பட்ட என்கவுன்ட்டர் எதாவது இருகிறதா?

சாட்சிகள் விசாரிக்க பட்டு / வாய்தாக்கள் வழங்கப்பட்டு / தரப்படுகிற தூக்கு தண்டனையை கூட ஏற்றுக்கொள்ள முடியாத எங்களுக்கு, உங்கள் என்கவுன்டர்கள் ஏற்படுத்துகிற உணர்வை வெளிபடுத்த வார்த்தைகள் இல்லை. குற்றங்கள் குறித்தும் / தண்டனை குறித்தும் பொதுமக்களின், பொது புத்தியில் இருக்கும் பதிவுகள் / சில நேரங்களில் இது போன்ற சம்பவங்களை ஆதரிக்கும் அபாயம் உண்டு என்ற அட்சமும் நம்மை தொற்றிகொள்கிறது.

இதேநிலை நீடித்தால் ,
நாளை நீங்களும் நானும் விசாரனைக்கு அழைத்து வரப்படலாம்..
தப்பிக்க முயன்றதாகவோ / தாக்க முயன்றதாகவோ கூறி சுடப்படலாம்.
தாக்க பட்டு (உயிர் பிழைத்த) காவல் அதிகாரி அரசு மருத்துவமனை யிலிருந்தும்
தேசிய மனித உரிமை கழகம், தங்கள் அலுவலகதிலிருந்தும்
தங்கள் தரப்பு நியாயங்களையும் / எதிர்ப்புகளையும் தரலாம்....
மற்றொரு நாளில்
நீங்களும் நானும் விசாரனைக்கு அழைத்து வரப்படலாம்..