Wednesday, October 7, 2009

10000 ரூபாயும், என் மனசாட்சியும் !

எங்கள் ஆபீஸ் இல் LTA என்று ஒரு திட்டம் உண்டு.
திட்டம் இது தான், குடும்பத்தோடு பயணம் செய்யும் பொது
பயணத்தொகையில் குறிபிட்ட அளவு office திரும்ப செலுத்தி விடும்.

என் முந்தய பயண சீட்டுகளை தேடி எடுத்ததில்
வெறும் 1200 ரூபாய் கு மட்டும் தேரியது.
(15000 வரை நான் apply பணிக்கலாம்)

சரி இந்த வருடம் 1200 போதும் என்று
application ஐ fullup செய்து கொண்டு HR ரிடம் சென்றேன்.
போகும் வழியில், ஹுசைன் அந்த application வாங்கி பார்த்தார்.
பொழைக்க தெரியாத பையனா இருக்கியே (!!!)
என்று திட்டி விட்டு, venki ஐ பார்க்க சொன்னார்.

venki இடம் ஒரு travel agent இன் தொலைபேசி எண் இருப்பதாகவும்,
அவரை contact பண்ணினால், நாம் விரும்பும் தொகைக்கு
டிக்கெட் களை வாங்கி கொள்ளலாம் எனவும் சொன்னார்.

மனசு குரங்கானது.
venki யிடம் போனேன்.

தனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு தான்
travel agent ஐ தெரியும் என்று சொல்லி
கிருஷ்ண மோகன் னிடம் அனுப்பினர்.

எங்கள் அலுவலகத்தில்
கிருஷ்ண மோகன் ஐ
இதுவரை நான் பார்த்தும் இல்லை, பேசியதும் இல்லை.
ஆனால் என் கால்கள்
அவரை தேடி அலைய தொடங்கின.

ஆந்திரா வில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால்
தன் சொந்த ஊருக்கு சென்ற கிருஷ்ண மோகன்
மாட்டி கொண்டதால் விடுப்பில் இருப்பதாகவும்
வர 5 நாட்கள் ஆகும் எனவும், அவர் நண்பர்
காந்தி சொன்னார்.

நமக்கு தேவை கிருஷ்ண மோகன் இல்லை travel agent என்பதால்
அவரை தொலை பேசி வலி தொடர்பு கொண்டு, travel agent இன்
number ஐ பெற்றுவிடலாம் என்று எனக்கு புது யோசனை தோன்றியது.
அதை அமுல்படுத்தும் பொறுப்பை காந்தி இடமே ஒப்படைத்தேன்.

மறுநாள் காந்தி, என் இருக்கைக்கு வந்தார்.
கிருஷ்ணா வை தொடர்பு கொள்ள முடிய வில்லை என்று கூரி,
துளசி என்ற மற்றொரு அலுவலக நண்பரை
அறிமுகப்படுத்தினார்.

இறுதியாக துளசியிடம் இருந்து,
travel agent நம்பர் கிடைக்க பெற்றேன்.
தொலை பேசியில் அவரை தொடர்பு கொண்டேன்.

தன் பெயர் ராமா ரெட்டி எனவும்,
தானே என் அலுவலகத்திற்கு மாலை வருவதாகவும்
வேண்டிய பணத்திற்கு டிக்கெட் ஐ பெற்று கொள்ளலாம்.
அதற்கு வெறும் 2 சதவீதம் மட்டும் commison எனவும்
சொலிவிட்டு, தொடர்பை துண்டித்தார் ராமா ரெட்டி.

எதிபார்த்த படியே மாலை வந்தார்.
நான் 10000 ரூபாய்க்கு டிக்கெட் களை
வங்கி விட்டு, commision அக 200 கொடுத்தேன்.

மறுநாள் 1200 கு பதிலாக 10000 ஐ
application இல் எழுதி HR ஐ நோக்கி நடந்தேன்.

ஹுசைன் சிரித்தார்..
மனசு கனத்தது..

No comments:

Post a Comment