Friday, December 11, 2009

ஏய் தோழா ! குடி கோலா !...

விளம்பர இடைவேளைகளுக்கு இடைல, t.v ல நேத்து ஒரு நிகழ்ச்சி பாத்துட்டு இருந்தேன்.
குடிகுறதுக்கு கஞ்சி இல்லாம, தொவச்சா கிழிஞ்சு போய்டும் அழுக்கு வேட்டியோட மல்லு கட்ற, நம்ம தமிழன பாத்து பெப்புசிய குடி, கோலாவ குடினு, நம்ம இளைய தளபதி பாடிகினு இருந்தாரு...
இவனுகளுக்கு பிளாச்சிமடைல , சொந்த நிலத்தோட நிலத்தடி நீர காப்பதுரதுக்காக இன்னைக்கும், நம்ம ஊரு போலீஸ் கிட்ட அடி வாங்கிக்கிட்டு, கோலாவுக்கு எதிரா போராடுற அப்பாவி பழங்குடி விவசாயிகள பத்தி கவலை இல்ல.
பெப்புசி,கோலானால, முடப்பட்ட எத்தனயோ சிறு தொழிற்சாலைகள பத்தியும், அந்த தொழிலாளர்களா பத்தியும் கவலை இல்ல.
நம்ம ஊரு தண்ணி , நாம ஊரு மூலதனம்,
நம்ம ஊரு தொழிலாளி ,நம்ம ஊரு இடம்,
வெறும் 40 பைசா செலவுல தயாரகுற ஒரு கருமத்த
10 ரூபாக்கு வாங்கி குடிச்சுட்டு , ஒட்டு மொத்த லாபத்தையும் அமெரிகவுக்கு அனுப்பிவைகுறதும் நம்ம ஊரு நாயகர்கள்.
இத பத்தியும் , எங்க இளைய தளபதிக்கும் ,சியானுக்கும் கவலை இல்ல .
ஏன் தலிவா, வேர்வ சிந்தி சம்பாதிச்ச காசுல,ஓம் படத்த பாத்துட்டு கை தட்ற குத்தத்துக்கு கண்ட கருமத்தை எல்லாம் குடிக்க சொல்லி ,வீட்டு முன்னாடி வந்து ஆடுறியே உனகெலாம் வெக்கமே இல்லையா.
தல நான் தெரியாமத்தேன் கேக்குறேன்,
யாரோ தெரியாத பசங்களுக்காக ஆட்டம் போடுற,
நம்ம சாதி சனம் ,இந்த மாப்ளை விநாயகரு சோடா,
காளி மார்க் கலர்க்கு ஒரு ஆட்டம் போட்டீனா ,
எதோ இல்லாத சனம் 2,3 ரூபாய்க்கு குடிச்சுபுட்டு சந்தோசமா இருப்போம்ல .
ம்ம் இதெலாம் உன் காதுல எங்க உளுகபோகுது , 50 லச்சத்துக்கு பெப்புசிய குடிக்க சொல்லலாமா?
1 கோடிக்கு கோலாவ குடிக்க சொல்லலாமா? 2 கோடிக்கு அமெரிக்ககாரனோட மூத்....... குடிக்க சொல்லலாமானு
யோசிச்சிகிட்டு இருப்பீங்க!
உங்கள சொல்லி குத்தமில்ல. கோக்கு இல்லாம மதிய சாப்பாடு சாப்பிட தெரியாத இந்த பயபிளைகல சொல்லனும்.
உங்க மேல எந்த தப்பும் இல்ல சாமி.
இதலாம் பாக்கும் போது, மதுரைல நான் படிச்சுகிட்டு, ஊர சுத்திக்கிட்டு இருந்தப்ப,கத்துகிட்ட ஒரு பாட்டு தான் நாபகம் வருது.

"நாடு முன்னேறுதுங்குறான் . நம்ம
நாடு முன்னேறுதுங்குறான். - அட
சினு சினு சினுக்கா,
மினு மினு மினுக்கா ,
செர்மன், அமெரிக்கா,,ஜப்பானு கணக்கா
நாடு முன்னேறுதுங்குறான்

தாகம் தீக்க கொக்க கோலா,
போத ஏத்த பாரின் சீசா,
மிக்சு பண்ணிக்க பெப்புசி லிகறு,
மித்த வேலைக்கெல்லாம் மினரல் வாட்டரு.
குடிக்க தண்ணி இல்ல, கொபளிக்க பன்னீரு
குடிக்க தண்ணி இல்ல, கொபளிக்க பன்னீரு
அடிரா செருப்பால வீங்கிபுடும் செவுலு. - நாடு
நாடு முன்னேறுதுங்குறான். நம்ம
நாடு முன்னேறுதுங்குறான்......"
- இப்படி தான் என்ன மாதீரி வெட்டி பயலுக வேலை இல்லாம
உசுபேத்தி விடுவானுக,
நீ ஆடு தலைவா...

No comments:

Post a Comment